/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கத்தியை காட்டி வழிப்பறி: மூவர் கைது
/
கத்தியை காட்டி வழிப்பறி: மூவர் கைது
ADDED : ஜன 29, 2026 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, சிவராஜபுரம் பகுதியில், வாலிபர்கள் சிலர் வழிப்பறியில் ஈடுபடுவதாக, பேசின் பாலம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
அதன்படி, போலீசார் அங்கு சென்று, கத்தியுடன் சுற்றிதிரிந்த மூவரை பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த ராகுல் என்ற கடல், 21, நவீன் என்கிற புல்லாத்தி நவீன், 19, மற்றும் 'கஞ்சா' மணிகண்டன், 19, என தெரிந்தது.
போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து, அவர்களிடம் இருந்து மூன்று கத்தியை பறிமுதல் செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

