sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வட்டிக்கு பணம் வாங்கிய பெண்ணை மிரட்டிய ரவுடி கைது

/

வட்டிக்கு பணம் வாங்கிய பெண்ணை மிரட்டிய ரவுடி கைது

வட்டிக்கு பணம் வாங்கிய பெண்ணை மிரட்டிய ரவுடி கைது

வட்டிக்கு பணம் வாங்கிய பெண்ணை மிரட்டிய ரவுடி கைது


ADDED : டிச 22, 2024 09:40 PM

Google News

ADDED : டிச 22, 2024 09:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு:புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முபீனா, 42. இவர், புளியந்தோப்பு மார்த்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பவானி என்பவரிடம், 40,000 ரூபாய் வட்டிக்கு வாங்கியுள்ளார்.

சிறு, சிறு தவணைகளாக, வாங்கிய பணத்தை முபீனா கட்டி வந்துள்ளார். ஆனால், பவானி கூடுதல் வட்டி கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. கூடுதல் வட்டியை கட்ட முடியாது என, முபீனா மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பவானி, சரித்திர பதிவேடு குற்றவாளியான, தன் கணவர் ராகுல், 28, வாயிலாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த முபீனா, புளியந்தோப்பு போலீசில் புகார் அளித்தார்.

அதன்படி வழக்கு பதிந்த புளியந்தோப்பு போலீசார், விசாரணைக்கு பின், ராகுலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று மாலை சிறையில் அடைத்தனர். தலைமறைவான பவானியை தேடி வருகின்றனர்.

ரவுடியான ராகுல் மீது, பல்வேறு காவல் நிலையங்களில், 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.






      Dinamalar
      Follow us