sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தொழிலதிபரின் மனைவியிடம் ரூ.10 கோடி மோசடி: 2 பேர் கைது

/

தொழிலதிபரின் மனைவியிடம் ரூ.10 கோடி மோசடி: 2 பேர் கைது

தொழிலதிபரின் மனைவியிடம் ரூ.10 கோடி மோசடி: 2 பேர் கைது

தொழிலதிபரின் மனைவியிடம் ரூ.10 கோடி மோசடி: 2 பேர் கைது


ADDED : நவ 07, 2024 12:17 AM

Google News

ADDED : நவ 07, 2024 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.

அதில், சமூக வலைதளத்தில் வந்த 'ஆன்லைன்' முதலீட்டு விளம்பரத்தை பார்த்தேன். அதில் இருந்த எண்ணில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, 'வாட்ஸாப் குழு' ஒன்றில் இணைய கூறினர். பின், வாட்ஸாப்பில் வந்த முதலீட்டு செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தேன்.

அவற்றில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியதால், பல்வேறு தவணையாக, 10.27 கோடி ரூபாய் செலுத்தினேன். செலுத்திய பணத்திற்கு ஏற்றவாறு, அதிக லாபம் வந்தது போலவும், முதலீடு செய்யப்பட்டது போலவும் செயலியில் காண்பித்தது.

பின் முதலீடு செய்த பணத்தை எடுக்க முற்பட்டபோது, 'வாட்ஸாப்' குழுவில் இணைத்தவர்கள், பல்வேறு காரணங்களை கூறி, மேலும் பணம் கேட்டு வற்புறுத்தினர்.

அதன் பின்னரே ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். எனவே தன்னிடம் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், பொழிச்சலுாரைச் சேர்ந்த ராஜேஷ் ராம், 36, கே.கே., நகரைச் சேர்ந்த சீனிவாசன், 43, ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும், மோசடி பேர்வழிகள் பணத்தை மலேஷியாவில் உள்ள ஏஜன்டுகளுக்கு அனுப்பியது தெரியவந்தது. நேற்று இருவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us