/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது/ போலீஸ் எனக்கூறி ரூ.10,000 வழிப்பறி
/
பொது/ போலீஸ் எனக்கூறி ரூ.10,000 வழிப்பறி
ADDED : ஜன 19, 2025 09:52 PM
எம்.கே.பி.நகர்:சென்னை, புரசைவாக்கம், சூளை போஸ்ட் ஆபிஸ், சுவாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் சதீஷ், 44; இவர், 13 ஆண்டுகளாக, மாதவரம், வடம்பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு சதீஷ், தன் சம்பள பணத்தை வாங்குவதற்காக, வியாசர்பாடி, சர்மா நகர், எட்டாவது தெருவில் வசித்து வரும், நிறுவன உரிமையாளர் கணேசன் வீட்டிற்கு சென்று, வாசலில் காத்திருந்தார். அவ்வழியே, டியோ இருசக்கர வாகனத்தில் ெஹல்மெட் அணியாமல் வந்த இருவர், போலீசார் எனக்கூறி, சதீைஷ பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது, கணேசன், அவரது உறவினர் மகனான சரவணன், 13, என்பவரிடம், சம்பள பணம், 10,000 ரூபாயை கொடுத்து அனுப்பினார். பணத்தை சதீஷ் பெறும்முன், போலீசார் எனக்கூறிய இருவரும், சிறுவனிடம் பணத்தை பறித்து தப்பினர்.
சதீஷ் கொடுத்த புகாரின்படி, எம்.கே.பி.,நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.