/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடியில் ரூ.11.80 கோடி சொத்து வரி ஊக்கத்தொகை அறிவிப்பால் வசூல்
/
ஆவடியில் ரூ.11.80 கோடி சொத்து வரி ஊக்கத்தொகை அறிவிப்பால் வசூல்
ஆவடியில் ரூ.11.80 கோடி சொத்து வரி ஊக்கத்தொகை அறிவிப்பால் வசூல்
ஆவடியில் ரூ.11.80 கோடி சொத்து வரி ஊக்கத்தொகை அறிவிப்பால் வசூல்
ADDED : மே 06, 2025 11:44 PM

ஆவடி, ஆவடி மாநகராட்சி, நான்கு மண்டலங்களில் உள்ள 48 வார்டுகளிலுமாக 89,488 பேர் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். இதன் வாயிலாக, மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் 81.60 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில், 2025 - 26 நிதி ஆண்டுக்கான சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. மேலும், ஏப்., 30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஊக்கத்தொகை அறிவிப்பு மற்றும் கோடை விடுமுறை துவங்கியதால், ஏப்ரல் மாதம் இறுதிக்குள் சொத்து வரி செலுத்த பொதுமக்கள் பலர் ஆர்வம் காட்டினர்.
அதன்படி, ஏப்., 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை 15,000க்கும் மேற்பட்டோர் சொத்து வரி செலுத்தி உள்ளனர். இதன் வாயிலாக, ஒரே மாதத்தில் 11.80 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம், 3 கோடி ரூபாய் வரி மட்டுமே வசூல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

