sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.17 லட்சம் வீடு; ரூ.30,000 உதவிதொகை மக்கள் ஒத்துழைக்க அரசு வேண்டுகோள்

/

ரூ.17 லட்சம் வீடு; ரூ.30,000 உதவிதொகை மக்கள் ஒத்துழைக்க அரசு வேண்டுகோள்

ரூ.17 லட்சம் வீடு; ரூ.30,000 உதவிதொகை மக்கள் ஒத்துழைக்க அரசு வேண்டுகோள்

ரூ.17 லட்சம் வீடு; ரூ.30,000 உதவிதொகை மக்கள் ஒத்துழைக்க அரசு வேண்டுகோள்


ADDED : மே 22, 2025 12:31 AM

Google News

ADDED : மே 22, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, அனகாபுத்துாரில் ஆற்றங்கரையோர மக்களுக்கு, வாரியம் வாயிலாக, 17 லட்சம் ரூபாயில் வீடுகள் கட்டித்தரப்படும். இடமாறுதல் மற்றும் வாழ்வாதார உதவியாக, 30,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. நதி நீர் சீரமைப்புக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்' என, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:

அடையாறு நதி சீரமைப்பு திட்டம், 1,500 கோடி ரூபாயில் அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக, சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனம் வாயிலாக, 300 கோடி ரூபாயில் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக, அனகாபுத்துாரில் ஆற்றங்கரையோரம் உள்ள, 593 குடும்பங்கள் இடம் மாற்றப்படுகிறது.

இவர்களுக்கு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, தைலாவரம், கீரப்பாக்கம், பெரும்பாக்கம், நாவலுார் ஆகிய இடங்களில், 390 சதுர அடியில், வீடுகள் கட்டப்பட்டு இலவசமாக வழங்கப்படும். வீட்டின் மதிப்பு 17 லட்சம் ரூபாய்.

அடையாறு ஆற்றங்கரையில் உள்ள ஜோதி ராமலிங்கம் நகர், திடீர் நகர், ஜோதி அம்மாள் நகர், சூர்யா நகர், மல்லிகைப்பூ நகரில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

குடும்பத்தினர் இடம்மாற 5,000 ரூபாய்; வாழ்வாதாரத்திற்காக மாதம் 2,500 ரூபாய் என, ஆண்டுக்கு 30,000 ரூபாய்; மின் இணைப்புக்காக 2,500 ரூபாயும் வழங்கப்படுகிறது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படியே குடியிருப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. நதி நீர் சீரமைப்பு திட்டம் என்பதால், வெள்ளத்தடுப்பு நடவடிக்கையாக, ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பாளர்களை, உரிய உதவிகளுடன் மறு குடியமர்வு செய்து வருகிறோம். அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us