sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

உரிமம் வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி

/

உரிமம் வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி

உரிமம் வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி

உரிமம் வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி


ADDED : ஜன 11, 2024 01:06 AM

Google News

ADDED : ஜன 11, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர், மணலிபுதுநகரைச் சேர்ந்த வளர்மதி, 33, என்பவர், அம்பத்துாரில் அழகு நிலையம் நடத்தி வந்தார். இவருக்கு, வெள்ளிவாயல் சாவடியைச் சேர்ந்த பா.ஜ., முன்னாள் மாவட்ட நிர்வாகி பொன்.பாஸ்கர் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

இவர், வளர்மதியின் அழகு நிலையத்திற்கு உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி, 25 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். பின், உரிமம் வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். பணத்தை திருப்பிக் கேட்ட போது, வளர்மதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பொன்.பாஸ்கரின் நண்பர்களான பா.ஜ., நிர்வாகிகளான முத்துராஜ், செந்தில்குமார், பாஸ்கரன் ஆகியோர், வளர்மதியை மிரட்டியதாகவும் தெரிகிறது.

இது குறித்து வளர்மதி, ஆவடி கமிஷனரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், மணலிபுதுநகர் போலீசார், பா.ஜ., நிர்வாகிகள் உட்பட ஆறு பேர் மீது, நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

மேல் நடவடிக்கை ஏதுமில்லாததால் ஆத்திரமடைந்த வளர்மதி, மீண்டும் ஆவடி கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். இதன்படி, மணலிபுதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us