/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்மாற்றியை உடைத்து ரூ.4 லட்சம் காப்பர் திருட்டு
/
மின்மாற்றியை உடைத்து ரூ.4 லட்சம் காப்பர் திருட்டு
ADDED : நவ 25, 2024 03:37 AM
திருவள்ளூர்,:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மேல்நல்லாத்துார். இங்கு குறைந்த அழுத்த மின்சாரத்தால் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து மணவாளநகர் மின்வாரிய அதிகாரிகள் இப்பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு வாரத்திற்கு முன் இப்பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் அருகில் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய மின்மாற்றி அமைத்தனர்.
நேற்று முன்தினம் காலை மின்மாற்றிக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணிக்கு மின்வாரிய ஊழியர்கள் வந்த போது மின்மாற்றி மாயமானது.
இதையடுத்து அப்பகுதியில் தேடிய போது மின்மாற்றியை திருடிச் சென்ற மர்ம நபர்கள் பெட்டியை சேதப்படுத்தி அதிலிருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பர் கம்பிகள் மற்றும் மின்சார பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து மணவாளநகர் மின்வாரிய உதவி பொறியாளர் லட்சுமிகாந்தன் கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.