/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு... ரூ.892 கோடி!:அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் மாநகராட்சி
/
தாம்பரத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு... ரூ.892 கோடி!:அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் மாநகராட்சி
தாம்பரத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு... ரூ.892 கோடி!:அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் மாநகராட்சி
தாம்பரத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு... ரூ.892 கோடி!:அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் மாநகராட்சி
UPDATED : ஜன 18, 2026 05:11 AM
ADDED : ஜன 18, 2026 05:08 AM

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, 892 கோடி ரூபாய் நிதி கேட்டு, தமிழக அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தாம்பரம், செம்பாக்கம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் என ஐந்து நகராட்சிகள்; பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம், திருநீர்மலை என, ஐந்து பேரூராட்சிகளை இணைத்து, 2021ல் தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளில், 38 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது. 11 வார்டுகளில் பணிகள் நடந்து வருகின்றன. எஞ்சிய, 21 வார்டுகள் அடங்கிய பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம், செம்பாக்கம் பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இந்நிலையில், 2024 - 25 சட்டசபை கூட்டத்தொடரில், நகராட்சி நிர்வாகத் துறை மானிய கோரிக்கையின்போது, 'தாம்பரம் மாநகராட்சியில், மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம், செம்பாக்கம் பகுதிகளில், 750 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்படும்' என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதேநேரத்தில், பெருங்களத்துார், பீர்க்கன்காரணை பகுதிகளையும் இணைத்து, திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, மேற்கண்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, 892 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
![]() |


