sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புது மணப்பெண் மரணம் ஆர்.டி.ஓ., விசாரணை

/

புது மணப்பெண் மரணம் ஆர்.டி.ஓ., விசாரணை

புது மணப்பெண் மரணம் ஆர்.டி.ஓ., விசாரணை

புது மணப்பெண் மரணம் ஆர்.டி.ஓ., விசாரணை


ADDED : மே 09, 2025 01:25 AM

Google News

ADDED : மே 09, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரும்பாக்கம், சென்னை, மேடவாக்கம் அடுத்த ஒட்டியம்பாக்கம், ஸ்ரீ சாய் நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன்,33. நாவலுாரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்க்கிறார். இரண்டரை மாதங்களுக்கு முன் சேலத்தை சேர்ந்த மஞ்சு பிரியதர்சினி, 28 என்பவருக்கும் கமலக்கண்ணனுக்கும் திருமணமானது.

இந்நிலையில், மஞ்சுபிரியதர்சினியை அவரது தாய் சத்தியவதி, சேலத்தில் இருந்து மொபைல் போன் வாயிலாக தொடர்பு கொண்டார். போனை எடுக்காததால், கமலக்கண்ணனுக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

வீட்டிற்கு வந்த கமலக்கண்ணன், ஜன்னல் வழியாக பார்த்தபோது, அறையில் மஞ்சு பிரியதர்சினி துாக்கில் தொங்கியபடி இருந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மஞ்சி பிரியதர்ஷினியின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கமலக்கண்ணன் அடிக்கடி வேறொரு பெண்ணுடன் நீண்ட நேரம் போனில் பேசியதால், கணவன் மீது சந்தேகம் அடைந்து மஞ்சு பிரியதர்சினி கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம், தகராறு நடந்துள்ளது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக, போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. திருமணமாகி இரண்டரை மாதத்தில் புது மணப்பெண் தற்கொலை செய்து கொண்டதால், ஆர்.டி.ஓ.,வின் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

***






      Dinamalar
      Follow us