/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் சங்கீத் உத்சவ் இசை நிகழ்ச்சி கோலாகலம்
/
சென்னையில் சங்கீத் உத்சவ் இசை நிகழ்ச்சி கோலாகலம்
சென்னையில் சங்கீத் உத்சவ் இசை நிகழ்ச்சி கோலாகலம்
சென்னையில் சங்கீத் உத்சவ் இசை நிகழ்ச்சி கோலாகலம்
ADDED : ஜன 15, 2026 06:45 AM

நீலாங்கரையில், 'சென்னையில் சங்கீத் உத்சவ்' இசை நிகழ்ச்சி துவங்கியுள்ளது.
மார்கழி மாதத்தை ஒட்டியும், கர்நாடக இசையில் பாரம்பரிய ராகங்களை முன்னிலைப்படுத்தும் வகையிலும், ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தைத் தரும் வகையிலும், ஜி.கே., மீடியா சார்பில், 'சென்னையில் சங்கீத உத்சவ் சீசன் - 4' எனும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை, நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நேற்று முன் தினம் துவங்கிய நிகழ்ச்சி, வரும் 18ம் தேதி வரை நடக்கவுள்ளது.
தினமும் மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடக்கும் இசை நிகழ்ச்சியில், டி.எம்.கிருஷ்ணா, ராஜேஷ் வைத்யா, சந்தீப் நாராயண் உள்ளிட்ட பிரபல கலைஞர் களின் கச்சேரி நடந்து வருகிறது.
அந்த வகையில், நேற்று மாலை நடந்த டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரியில், 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, அவரது இசையை ரசித்தனர். சிறப்பு ஏற்பாடாக உணவும் தயார் செய்யப்பட்டிருந்தது.
இன்று மாலை பரத் சுந்தர்; நாளை மைசூர் டாக்டர் மஞ்சுநாத்; நாளை மறுதினம் சந்தீப் நாராயண், 18ம் தேதி விசாகா ஹரி ஆகிய கலைஞர்களின் கச்சேரி நடக்கிறது.

