/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சன்னிதி தெருவில் உலாவும் கால்நடைகளால் தொல்லை
/
சன்னிதி தெருவில் உலாவும் கால்நடைகளால் தொல்லை
ADDED : பிப் 06, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலுக்கு, தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வர்.
இந்நிலையில், கோவிலுக்கு செல்லும் தேரடி, சன்னிதி தெருவில், உரிமையாளர் இல்லாத பசுமாடுகள் பெரும் தொல்லையாக உள்ளது. இது குறித்து மாநகராட்சி மற்றும் கோவில் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் பலனில்லை.
சில நேரங்களில், கால்நடைகள் சண்டையிட்டு, பக்தர்கள் மீது முட்டுவதால் காயம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.
- எஸ்.மகேஸ்வரன், பக்தர், திருவொற்றியூர்.