/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளி மாணவன் துாக்கிட்டு தற்கொலை
/
பள்ளி மாணவன் துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஜன 25, 2026 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஆவடி, காந்தி நகரைச் சே ர்ந்தவர் மனோகரன், 55; கணினி விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். இவரது மகன் சாய் தீபக், 17, தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
கடந்த 11ம் தேதி, குடும்பத்தினர் அனைவரும் இந்தோனேசியாவிற்கு சுற்றுலா சென்ற நிலையில், தேர்வு இருப்பதாக கூறி, சாய் தீபக்கை சுற்றுலாவிற்கு அழைத்து செல்லவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மனோகரன் குடும்பத்துடன் வீடு திரும்பிய போது, சாய் தீபக் படுக்கை அறையில், மின் விசிறி கொக்கியில் வேஷ்டியால் துாக்கிட்டு தற்கொலைசெய்தது தெரிந்தது.
ஆவடி போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

