/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் பலி
/
மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் பலி
ADDED : ஜன 31, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லாவரம், கன்டோன்மென்ட் பல்லாவரம், ஈஸ்வரி நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் சேகர்; ஆட்டோ ஓட்டுனர். இவரது மகன் அரவிந்தன், 16, பல்லாவரத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
நேற்று காலை, வீட்டில் இருந்த அரவிந்தன், மோட்டார் சுவிட்சை போட்ட போது, கால் தவறி கீழே விழுந்தவர், எதிர்பாராதவிதமாக மின் வடத்தை பிடித்ததில் மின்சாரம் பாய்ந்தது.
உடனே, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, மருத்துவர் பரிசோதனையில், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.