/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புழல் ஏரியில் மிதந்த பள்ளி மாணவர் உடல்
/
புழல் ஏரியில் மிதந்த பள்ளி மாணவர் உடல்
ADDED : பிப் 04, 2024 01:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்குன்றம்:செங்குன்றம், நாரவாரிகுப்பம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முரளி. இவரது மகன் சுனில், 16. அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று முன்தினம், சுனில் வீடு திரும்பவில்லை.
பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர்.இந்த நிலையில், புழல் ஏரியில் உடல் ஒன்று மிதப்பதாக, நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. செங்குன்றம் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு கரையில் சேர்த்தனர்.
விசாரணையில், காணாமல் போன முரளியின் மகன் சுனில் என தெரிந்தது. செங்குன்றம் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.