ADDED : நவ 23, 2025 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்: கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் அம்மாசி, 45. மறைமலை நகர் அடுத்த கோனாதி பகுதியில் தங்கி , பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம்., கல்லுாரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மதியம் பணியில் இருந்தபோது, பின்னால் வந்த கிரேன் வாகனம் அம்மாசி மீது மோதியது. அம்மாசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மறைமலை நகர் போக்குவரத்து போலீசார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

