/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டி புதிய பூங்காவில் நாற்று பண்ணை
/
கிண்டி புதிய பூங்காவில் நாற்று பண்ணை
ADDED : நவ 19, 2025 04:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கிண்டியில் ரேஸ்கோர்ஸ் கிளப்பிடம் இருந்து, தமிழக அரசால் 118 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுஉள்ளது.
இந்த இடத்தில் தோட்டக்கலைத்துறை வாயிலாக சுற்றுச்சூழல் பூங்காவும், சென்னை மாநகராட்சி வாயிலாக நான்கு குளங்களும் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், அங்கு தோட்டக்கலை வளர்ச்சி முகமை வாயிலாக, நாற்றுகள் மற்றும் செடிகள் விற்பனை பண்ணை துவங்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு வகையான அலங்கார தாவரங்கள், பழ மரக்கன்றுகள், மருத்துவ செடிகள், உட்புற தாவரங்கள், பூர்வீக மரவகைகள், ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

