ADDED : அக் 25, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரை சேர்ந்தவர் விவேக் ராஜ், 28; பெயிண்டர். இவர் மீது, 12க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளியான விவேக் ராஜ், ரவுடி சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்டு வந்ததோடு, பல முறை கைது செய்யப்பட்டு சிறை சென்று ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், போலீசார் தன்னை தீவிரமாக தேடி வருவதால், சீசிங் ராஜாவை போல், தன்னையும் என்கவுண்டர் செய்து விடுவார்களோ என்ற பயத்தில் இருந்தார். அவராகவே, தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் -1ல், நேற்று முன்தினம் ஆஜராகி, பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் சரணடைந்தார். மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி, ரவுடி விவேக் ராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.

