UPDATED : ஆக 13, 2026 11:07 PM
ADDED : ஆக 13, 2026 11:04 PM
அ நிறம் | அளவு
தாம்பரம்: தாம்பரம் பகுதி ரேஷன் கடைகளில், சர்வர் பழுது ஏற்பட்டது.
சென்னை புறநகர், தாம்பரம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில், அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்க,காலை, வழக்கம் போல் வாடிக்கையாளர்கள் திரண்டனர்.
ஆனால், காலை முதல் பல கடைகளில், 'சர்வர்' வேலை செய்யாததால், பொருட்கள் வாங்க முடியாமல், மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
இது குறித்து, அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டதற்கு, சர்வரை மேம்படுத்தும் பணிகள் நடந்ததால், கோளாறு ஏற்பட்டதாகவும், அது சரி செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். ஆனாலும், பல மணி நேரமாக வெயிலில் காத்திருந்தும், பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
