sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குடிநீரில் கழிவுநீர் கலப்பு முதல்வர் தொகுதியில் அவலம்

/

குடிநீரில் கழிவுநீர் கலப்பு முதல்வர் தொகுதியில் அவலம்

குடிநீரில் கழிவுநீர் கலப்பு முதல்வர் தொகுதியில் அவலம்

குடிநீரில் கழிவுநீர் கலப்பு முதல்வர் தொகுதியில் அவலம்


ADDED : ஜன 23, 2025 12:18 AM

Google News

ADDED : ஜன 23, 2025 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொளத்துார்,

முதல்வரின் கொளத்துார் தொகுதியில், திரு.வி.க., நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பெரியார் நகர் 3வது குறுக்கு தெருவில் உள்ள குடியிருப்புகளுக்கு, செம்மண் நிறத்தில் துர்நாற்றத்துடன் கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த தண்ணீரில் முகம் கழுவினாலே, தொற்று பரவும் அபாயம் உள்ளது.

சமீபத்தில் இப்பகுதியில் நடந்த, 'மக்களைத் தேடி பயணம்' செய்த அமைச்சர், மேயர் மற்றும் கவுன்சிலரிடம், பகுதிவாசிகள் புகார் தெரிவித்தனர்.

அப்போது, 'ஜெட்ராய்ட் இயந்திரம் வாயிலாக, குழாயில் துளை போட்டு, பிரச்னை சரிசெய்யப்படும்' என்று, அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இரண்டு வாரத்திற்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

குடிநீர் குழாய் பதித்து, 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. புதிய குழாய் அமைத்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்.

பெரியார் நகர் பிரதான சாலையில் மட்டுமே குழாயை மாற்றியுள்ளனர். குடியிருப்பு பகுதிக்கு மாற்றவில்லை. இதற்கு தீர்வு காண முதல்வர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us