ADDED : டிச 07, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,வளசரவாக்கம், லட்சுமி நகர் 1வது பிரதான சாலையில் உள்ள ஒரு வீட்டில், பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு, தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று, போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில், வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி, 41, என்பவர், வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது.
நேற்று அவரை கைது செய்த போலீசார், அவரிடம் சிக்கிய பெண்ணை மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.