/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாலியல் தொழில் நடத்தியோர் சிக்கினர்
/
பாலியல் தொழில் நடத்தியோர் சிக்கினர்
ADDED : ஜன 25, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, கோடம்பாக்கம், தார் அஸ்லாம் அசோக் அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அர்ஜூன்குமார், 29 என்பவர் பாலியல் தொழில் நடத்திவந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் சிக்கியிருந்த இரண்டு பெண்களை மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அதேபோல், திருவல்லிக்கேணியில் தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடத்திவந்த ஸ்ரீகாந்த் பாபு, 57, பிரசாந்த், 23, மகராஜன், 23 ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சிக்கிய பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.