/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில வாலிபால் போட்டியில் சிவந்தி கிளப் அணி 'சாம்பியன்'
/
மாநில வாலிபால் போட்டியில் சிவந்தி கிளப் அணி 'சாம்பியன்'
மாநில வாலிபால் போட்டியில் சிவந்தி கிளப் அணி 'சாம்பியன்'
மாநில வாலிபால் போட்டியில் சிவந்தி கிளப் அணி 'சாம்பியன்'
ADDED : மார் 13, 2026 05:13 AM

சென்னை: சென்னையில் நடந்த மாநில வாலிபால் போட்டியில், சென்னை சிவந்தி கிளப் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.
நெல்லை ப்ரெண்ட்ஸ் கிளப் சார்பில், இரு பாலருக்குமான மாநில வாலிபால் போட்டி, எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் வாலிபால் மைதானத்தில், நடந்து வருகிறது. இதில், எட்டு ஆடவர் மற்றும் ஐந்து பெண்கள் என, மொத்தம் 13 அணிகள் போட்டியிட்டன.
மகளிர் இறுதி லீக் போட்டி, நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், சென்னை சிவந்தி கிளப் அணி, ஐ.சி.எப்., சென்னை அணியை எதிர்த்து மோதியது.
விறுவிறுப்பான இப்போட்டியில் அசத்திய சிவந்தி அணி 25 - 17, 25 - 20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் எஸ்.ஆர்.எம்., ஸ்பைக்கர் அணியும், தமிழக காவல் துறை அணியும் களமிறங்கின. அனல் பறந்த போட்டியில் எஸ்.ஆர்.எம்., ஸ்பைக்கர் அணி 25 - 18, 25 - 16 என்ற நேர் செட் கணக்கில், தமிழக காவல் துறை அணியை வீழ்த்தி வென்றது.
மொத்த போட்டிகளில், அதிக புள்ளிகள் பெற்ற சிவந்தி கிளப் அணி முதலிடம் பிடித்து சாம்பியன் கோப்பையை வென்றது. ஐ.சி.எப்., சென்னை அணி இரண்டாவது இடத்தை பிடித்தது.

