sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

செம்மஞ்சேரி வாலிபருக்கு வெட்டு 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது

/

செம்மஞ்சேரி வாலிபருக்கு வெட்டு 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது

செம்மஞ்சேரி வாலிபருக்கு வெட்டு 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது

செம்மஞ்சேரி வாலிபருக்கு வெட்டு 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது


ADDED : ஆக 01, 2025 12:33 AM

Google News

ADDED : ஆக 01, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்மஞ்சேரி,

வாலிபரை வெட்டிய, 5 சிறுவர்கள் உட்பட 6 பேரை, போலீசார் கைது செய்தனர்.

செம்மஞ்சேரி, சுனாமி நகரை சேர்ந்தவர் சக்திவேல், 20. இரு தினங்களுக்கு முன், வீட்டின் அருகே நின்ற போது, பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆறு பேர், செம்மஞ்சேரி பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தனர். இது குறித்து, சக்திவேல் அவர்களிடம் விசாரித்துள்ளார்.

இதில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் விலக்கி விட்டதும், அங்கிருந்து ஆறு பேரும் சென்றனர். மறுநாள், சக்திவேலை தேடி வந்த அவர்கள், கத்தியால் முதுகு, தலையில் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த சக்திவேல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

செம்மஞ்சேரி போலீசார் விசாரணையில், பெரும்பாக்கத்தை சேர்ந்த சூர்யா, 24, மற்றும் 17 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.

நேற்று, ஆறு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சூர்யாவை புழல் சிறையில் அடைத்தனர். ஐந்து சிறுவர்களையும், அரசு கூர்நோக்கு பள்ளியில் சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us