தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பாம்பு தீண்டி  மாணவன் 'சீரியஸ்'

பாம்பு தீண்டி  மாணவன் 'சீரியஸ்'

பாம்பு தீண்டி  மாணவன் 'சீரியஸ்'


ADDED : மே 27, 2025 12:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2025 12:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆவடி, திருமுல்லைவாயில், வடுகர் காலனியைச் சேர்ந்தவர் சரவணன், 50. இவர், செங்குன்றத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது இளைய மகன் தவசி, 20; டிப்ளமா முதலாமாண்டு மாணவர்.

இவர், பாலவேடு டோல்கேட் அருகே உள்ள மைதானத்தில், நேற்று முன்தினம் மாலை விளையாடுவதற்காக சென்றார். பின், இரவு தன் 'ஹீரோ ஸ்ப்ளெண்டர்' பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

ஆவடி, பாலவேடு அருகே சென்றபோது, 'பைக்' முன்பாகத்தில் பதுங்கி இருந்த கட்டுவிரியன் பாம்பு, அவரது இடது கை நடு விரலில் தீண்டியது. அதிர்ச்சியில் தவசி, பைக்குடன் சாலையில் விழுந்துள்ளார்.

அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, பைக்கில் பதுங்கி இருந்த பாம்பை வெளியே விரட்டினர். தகவலறிந்து வந்த அவரது நண்பர்கள், அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us