sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சாலையில் வழிந்தோடிய கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு

/

சாலையில் வழிந்தோடிய கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு

சாலையில் வழிந்தோடிய கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு

சாலையில் வழிந்தோடிய கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு


ADDED : ஜன 18, 2024 12:49 AM

Google News

ADDED : ஜன 18, 2024 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெற்குன்றம், வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம் 145வது வார்டில், 210 தெருக்கள் உள்ளன. இதில், 150 தெருக்களில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டன.

இவற்றில் பல மழைநீர் வடிகால்கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. இந்த நிலையில் மீதம் உள்ள 60 தெருக்களில் இன்னும் மழைநீர் வடிகால் அமைக்கப்படாமல் உள்ளது.

சமீபத்தில் சென்னையில் பெய்த மழையால், பல மழைநீர் வடிகால்கள் நிரம்பி உள்ளன. இதில், நெற்குன்றம் அகத்தியர் நகர் 1வது தெருவில் உள்ள பக்கவாட்டு கால்வாயில் நிரம்பி, சாலையில் கழிவு நீர் வழிந்தோடியது.

இதனால், இச்சாலையில் நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தொற்று நோயால் பாதிக்கப்படும் நிலை இருந்தது. இது குறித்து நம் நாளிதழல் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, அப்பகுதியை ஆய்வு செய்த மாநகராட்சி ஊழியர்கள், பக்கவாட்டு கால்வாயில் உள்ள அடைப்பை அகற்றி, சாலையில் கழிவு நீர் வழிந்தோடாமல் நடவடிக்கை மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us