ADDED : டிச 31, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர், மணலி, சடையங்குப்பம், பர்மா நகரைச் சேர்ந்தவர் செல்வம், 62. இவர், சிந்தாதிரிப்பேட்டை மின் வாரியத்தில், அலுவலக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
நேற்று முன்தினம்இரவு, குடும்ப பிரச்னை காரணமாக, செல்வத்தை அவரதுமகன் சரத்குமார் என்பவர், அடித்து கீழே தள்ளியுள்ளார்.
இதில், காயமடைந்த செல்வத்தை, உறவினர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து, சாத்தாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.