sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பல்லாவரத்தில் ஸ்பானிஷ் வீடுகள் 'காசாமியா' திட்டத்தில் அறிமுகம்

/

பல்லாவரத்தில் ஸ்பானிஷ் வீடுகள் 'காசாமியா' திட்டத்தில் அறிமுகம்

பல்லாவரத்தில் ஸ்பானிஷ் வீடுகள் 'காசாமியா' திட்டத்தில் அறிமுகம்

பல்லாவரத்தில் ஸ்பானிஷ் வீடுகள் 'காசாமியா' திட்டத்தில் அறிமுகம்


ADDED : ஏப் 18, 2025 12:20 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,சென்னை, பல்லாவரத்தில், 22 ஏக்கர் பரப்பளவில், 1,300 வீடுகள் அடங்கிய 'காசாமியா' என்ற ஸ்பானிஷ் மாதிரி குடியிருப்பு திட்டத்தை, 'காசா கிராண்ட்' நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, காசா கிராண்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

பல்லாவரத்தின் மையப்பகுதியில், 'காசாமியா' என்ற பெயரில், காசா கிராண்ட் நிறுவனம், புதிய திட்டத்தை துவங்கவுள்ளது.

இங்கு, 22 ஏக்கர் பரப்பளவில், ஸ்பானிஷ் நாட்டு கட்டடகலை பாணியில்மாபெரும் குடியிருப்பு திட்டம் கட்டப்பட்ட உள்ளது.

இந்த வளாகத்தில், 2,3,4 படுக்கை அறைகளுடன், 1,300 வீடுகள் கட்டப்பட உள்ளன. இந்த வீடுகளுக்கு, 45 லட்சம் ரூபாய் முதல், 1.36 கோடி ரூபாய் வரையில் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பல்லாவரத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை, சதுர அடிக்கு, 7,000 ரூபாயாக உள்ள நிலையில், சதுர அடிக்கு, 4,199 ரூபாய் விலையில் வீடுகள் வழங்கப்படுகின்றன. வாழ்க்கை முறையை மாற்றும் வகையில் சிறப்பான வசதிகள் அடங்கியதாக இந்த குடியிருப்பு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு, 2 ஏக்கர் டிராப்பிக்கல் பாரஸ்ட், தேக்கு மரங்கள், பழ தோட்டங்கள், 15 ஏக்கரில் திறந்தவெளி பகுதி, 1.5 ஏக்கரில் ஸ்பானிஷ் பாணி கிளப் ஹவுஸ், நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகள் அமைய உள்ளன.

சென்னை ரியல் எஸ்டேட் வரலாற்றில், இத்திட்டம் புதிய அத்தியாயமாக இருக்கும். கூடுதல் தகவல்களை, 98844 60877 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us