ADDED : ஆக 29, 2025 10:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரும்பாக்கம், பெரும்பாக்கம், தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதி, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்கள், 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இதில் 18 முதல் 40 வயது வரை உள்ளோர், தங்கள் கல்வி சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.