/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மதுரை - ராஜஸ்தானுக்கு எழும்பூர் வழி சிறப்பு ரயில்
/
மதுரை - ராஜஸ்தானுக்கு எழும்பூர் வழி சிறப்பு ரயில்
ADDED : ஏப் 26, 2025 12:20 AM
சென்னை, மதுரையில் இருந்து எழும்பூர் வழியாக ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:
★ மதுரையில் இருந்து வரும் 28ம் தேதி காலை 10:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாளில் பகல் 12:30 மணிக்கு பகத் கீ கோதிக்கு செல்லும்
★ பகத் கீ கோதியில் இருந்து வரும் மே 1ம் தேதி காலை 5:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாளில் காலை 8:30 மணிக்கு மதுரைக்கு செல்லும். திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, எழும்பூர் வழியாக இயக்கப்பட உள்ளன
★ சென்ட்ரலில் இருந்து நாளை இரவு 7:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாளில் பகல் 12:30 மணிக்கு பகத் கீ கோதிக்கு செல்லும்
★ பகத் கீ கோதியில் இருந்து வரும் 30ம் தேதி காலை 5:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நாள் இரவு 11:15 மணிக்கு சென்ட்ரல் வரும். இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.