sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புறநகரில் சூடுபிடித்த கீரை விளைச்சல்

/

புறநகரில் சூடுபிடித்த கீரை விளைச்சல்

புறநகரில் சூடுபிடித்த கீரை விளைச்சல்

புறநகரில் சூடுபிடித்த கீரை விளைச்சல்


ADDED : மார் 27, 2025 12:09 AM

Google News

ADDED : மார் 27, 2025 12:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை செங்குன்றத்தில் இருந்து 9 கி.மீ., துாரத்தில் உள்ள பழைய பம்மதுகுளம், கோணிமேடு சுற்றுவட்டார பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கண்ணுக்கு எட்டிய துாரம் வரை பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் கீரை வகைகள் பசுமையாக காட்சியளிக்கின்றன. இங்குள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், இரண்டு தலைமுறைகளாக விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை, முருங்கை, தண்டுகீரை, பொன்னாங்கண்ணி, என பல வகை கீரைகள் பயிரிடப்படுகின்றன.

கோடை துவங்கியதை அடுத்து, கடந்த மாதம் முதல் கீரை விவசாயம் சூடுபிடித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலுக்கு பின், கீரை வகைளை விரும்பி உண்ணத் துவங்கியுள்ள மக்களுக்கு, சென்னைக்கு அருகே ரசாயன கலப்பில்லாத கீரை வகைகள் கிடைப்பது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us