/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய பாரா 'டென்பின் பவுலிங்' போட்டி தமிழக வீரர் - வீராங்கனையர் 'சாம்பியன்'
/
தேசிய பாரா 'டென்பின் பவுலிங்' போட்டி தமிழக வீரர் - வீராங்கனையர் 'சாம்பியன்'
தேசிய பாரா 'டென்பின் பவுலிங்' போட்டி தமிழக வீரர் - வீராங்கனையர் 'சாம்பியன்'
தேசிய பாரா 'டென்பின் பவுலிங்' போட்டி தமிழக வீரர் - வீராங்கனையர் 'சாம்பியன்'
ADDED : மே 09, 2025 11:59 PM

சென்னை, ஐந்தாவது தேசிய பாரா 'டென்பின் பவுலிங்' சாம்பியன்ஷிப் போட்டி, பெங்களூரில் நடந்தது. போட்டியில், ஐந்து மாநிலங்களில் இருந்து, 90 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து, 11 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
இதில், ஆண்களுக்கான டி.பி.பி., - 9 ஒற்றையர் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த பி.ஹரிநாராயணன், 1,089 - - 1,058 என்ற புள்ளிகளில், கர்நாடக வீரர் சுஜித்சிங்கை தோற்கடித்து, தங்கம் வென்றார்.
இரட்டையர் பிரிவிலும், தமிழக வீரர்கள் ஹரிநாராயணன் - சாந்தமுத்துவேல் ஜோடி, வெள்ளிப் பதக்கம் வென்றது.
அதேபோல், பெண்கள் டி.பி.பி., - 9 ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில், தமிழகத்தின் மாரீஸ்வரி, 375 - 327 என்ற புள்ளிகளில், கர்நாடக வீராங்கனை ஜெயரத்தினாவை தோற்கடித்து தங்கம் வென்றார்.
அதேபோல், இரட்டையர் பிரிவில், தமிழக வீராங்கனையர் மாரீஸ்வரி - கிருஷ்ணவேணி ஜோடி, வெள்ளிப் பதக்கம் வென்றது.
ஒற்றையர் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த அந்தோணி, 219 புள்ளிகள் கைப்பற்றி வெள்ளி பதக்கத்தையும், இரட்டையர் பிரிவில் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினார்.