sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'ஸ்பர்ஷ்' - தொழுநோய் இன்று முதல் விழிப்புணர்வு

/

'ஸ்பர்ஷ்' - தொழுநோய் இன்று முதல் விழிப்புணர்வு

'ஸ்பர்ஷ்' - தொழுநோய் இன்று முதல் விழிப்புணர்வு

'ஸ்பர்ஷ்' - தொழுநோய் இன்று முதல் விழிப்புணர்வு


ADDED : ஜன 30, 2024 12:11 AM

Google News

ADDED : ஜன 30, 2024 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ''கல்வி நிலையம், மருத்துவமனைகளில், 'ஸ்பர்ஷ்' - தொழுநோய் விழிப்புணர்வு முகாம் இன்று முதல் துவங்குகிறது,'' என, கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்து உள்ளார்.

அவர் தெரிவித்ததாவது:

மஹாத்மா காந்தியின் நினைவுநாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் ஜன., 30ம் தேதி தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தாண்டு, தமிழகத்தில் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம், இன்று துவங்கி, பிப்., 13 வரை அனுசரிக்கப்பட உள்ளது.

அந்நாட்களில் மாநிலம் முழுதும், அனைத்து கல்வி நிலையங்கள், மாவட்ட மற்றும் வட்ட மருத்துவமனைகள், அரசு சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லுாரிகள் மற்றும் நிறுவனங்களில் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட உள்ளது.

அதேபோல் சிகிச்சை முகாம், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து துண்டு பிரசுரம் வழங்கப்பட உள்ளது.

நம் மாவட்டத்தில், 10,000 மக்கள் தொகைக்கு நோய் பரவுதல், 0.15 விகிதமாக உள்ளது. இதை, 2027 ஆண்டிற்குள், தொழுநோய் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர்தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us