sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மூளை ரத்த நாள வீக்கத்தால் பாதித்த இலங்கை பெண்ணுக்கு மறுவாழ்வு

/

மூளை ரத்த நாள வீக்கத்தால் பாதித்த இலங்கை பெண்ணுக்கு மறுவாழ்வு

மூளை ரத்த நாள வீக்கத்தால் பாதித்த இலங்கை பெண்ணுக்கு மறுவாழ்வு

மூளை ரத்த நாள வீக்கத்தால் பாதித்த இலங்கை பெண்ணுக்கு மறுவாழ்வு


ADDED : நவ 06, 2025 02:50 AM

Google News

ADDED : நவ 06, 2025 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மூளை ரத்த நாள வீக்கத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, காவேரி மருத்துவமனையில் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காவேரி மருத்துவ குழும நிர்வாக இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:

இலங்கையை சேர்ந்த 60 வயதான பெண், தொடர்ச்சியான தலைவலி, மங்கலான பார்வையாலும் அவதிப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் 2.8 செ.மீ., அளவில் ரத்த நாள வீக்கம் இருப்பது, பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

அந்த வீக்கம், பலுான் போல் வீங்கி, வெடிக்கும் ஆபத்தான தன்மையுடன் இருந்தது. அப்பெண்ணுக்கு திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்ய முடியாது.

அதன் காரணமாக, 'என்டோவாஸ்குலர் ப்ளோ டைவர்ஷன் வித் காயிலிங்' என்ற நவீன சிகிச்சை வாயிலாக, குறைந்தபட்ச ஊடுருவல் வாயிலாக, சிக்கலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது, அப்பெண் நலமுடன் உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us