sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பஹல்காம் தாக்குதலில் இறந்தோர் குடும்பத்திற்கு உதவ எஸ்.ஆர்.எம்., பல்கலை நிதியுதவி

/

பஹல்காம் தாக்குதலில் இறந்தோர் குடும்பத்திற்கு உதவ எஸ்.ஆர்.எம்., பல்கலை நிதியுதவி

பஹல்காம் தாக்குதலில் இறந்தோர் குடும்பத்திற்கு உதவ எஸ்.ஆர்.எம்., பல்கலை நிதியுதவி

பஹல்காம் தாக்குதலில் இறந்தோர் குடும்பத்திற்கு உதவ எஸ்.ஆர்.எம்., பல்கலை நிதியுதவி


ADDED : மே 16, 2025 11:24 PM

Google News

ADDED : மே 16, 2025 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்கு தலில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு உதவ, எஸ்.ஆர்.எம்., பல்கலை 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு, எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தரான பாரிவேந்தர் எழுதியுள்ள கடிதம்:

தேசிய ஒற்றுமையையும், மனிதநேய பொறுப்பையும் பிரதிபலிக்கும் வகையில், எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், பஹல்காம் பகுதியில் சமீபத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட, 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்குகிறது. மத்திய அரசு மற்றும் ஆயுதப்படைகள் மேற்கொண்ட 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற வெற்றிகரமான முன்னெடுப்பு, நம் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் வலிமையின் வெளிப்பாடாக உள்ளது.

இந்த நடவடிக்கை, தேசத்திற்கு பெருமையை தந்துள்ளது. எஸ்.ஆர்.எம்., வழங்கும் 1 கோடி ரூபாய், பாதிக்கப்பட்டோரின் நலனுக்கும், மறுவாழ்விற்கும் பயன்படுத்தப்படும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் உயர் கல்விக்கு தேவையான ஆதரவை, அவர்களின் கல்விப்பயணம் முழுமை அடையும் வரை எஸ்.ஆர்.எம்., நிறுவனம் வழங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us