/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஹல்காம் தாக்குதலில் இறந்தோர் குடும்பத்திற்கு உதவ எஸ்.ஆர்.எம்., பல்கலை நிதியுதவி
/
பஹல்காம் தாக்குதலில் இறந்தோர் குடும்பத்திற்கு உதவ எஸ்.ஆர்.எம்., பல்கலை நிதியுதவி
பஹல்காம் தாக்குதலில் இறந்தோர் குடும்பத்திற்கு உதவ எஸ்.ஆர்.எம்., பல்கலை நிதியுதவி
பஹல்காம் தாக்குதலில் இறந்தோர் குடும்பத்திற்கு உதவ எஸ்.ஆர்.எம்., பல்கலை நிதியுதவி
ADDED : மே 16, 2025 11:24 PM
சென்னை:ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்கு தலில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு உதவ, எஸ்.ஆர்.எம்., பல்கலை 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு, எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தரான பாரிவேந்தர் எழுதியுள்ள கடிதம்:
தேசிய ஒற்றுமையையும், மனிதநேய பொறுப்பையும் பிரதிபலிக்கும் வகையில், எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், பஹல்காம் பகுதியில் சமீபத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட, 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்குகிறது. மத்திய அரசு மற்றும் ஆயுதப்படைகள் மேற்கொண்ட 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற வெற்றிகரமான முன்னெடுப்பு, நம் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் வலிமையின் வெளிப்பாடாக உள்ளது.
இந்த நடவடிக்கை, தேசத்திற்கு பெருமையை தந்துள்ளது. எஸ்.ஆர்.எம்., வழங்கும் 1 கோடி ரூபாய், பாதிக்கப்பட்டோரின் நலனுக்கும், மறுவாழ்விற்கும் பயன்படுத்தப்படும்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் உயர் கல்விக்கு தேவையான ஆதரவை, அவர்களின் கல்விப்பயணம் முழுமை அடையும் வரை எஸ்.ஆர்.எம்., நிறுவனம் வழங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.