sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால சாலை திட்டம் ரூ.2,100 கோடி பணியை துவக்கி வைத்தார் ஸ்டாலின்

/

 திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால சாலை திட்டம் ரூ.2,100 கோடி பணியை துவக்கி வைத்தார் ஸ்டாலின்

 திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால சாலை திட்டம் ரூ.2,100 கோடி பணியை துவக்கி வைத்தார் ஸ்டாலின்

 திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால சாலை திட்டம் ரூ.2,100 கோடி பணியை துவக்கி வைத்தார் ஸ்டாலின்


ADDED : பிப் 27, 2026 05:31 AM

Google News

ADDED : பிப் 27, 2026 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: இ.சி.ஆரில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை, 2,100 கோடி ரூபாயில், 13.3 கி.மீ., நீள மேம்பால சாலை கட்டுமான பணியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.

சென்னையின் முக்கிய சாலையாக, இ.சி.ஆர்., உள்ளது. திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை வாகனத்தில் செல்ல, 45 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை ஆகிறது.

இதே துாரத்தை, 20 நிமிடங்களில் கடக்கும் வகையில், நான்கு வழி மேம்பால சாலை கட்ட, மாநில நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது.

அதன்படி, திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை, 2,100 கோடி ரூபாயில், 13.3 கி.மீ., நீளத்திற்கு மேம்பால சாலை கட்டப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று, திருவான்மியூரில் நேற்று நடந்த நிகழ்வில் துவக்கி வைத்தார்.

பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் கட்டப்படும் இந்த மேம்பால சாலை, 18 அடி உயரம், 56 அடி அகலத்தில், நான்கு வழி சாலையாக அமைகிறது.

நீலாங்கரை, அக்கரை பகுதியில் இருந்து ஏறவும், இறங்கவும் சாய்வு பாதை அமைக்கப்படும். எச்.ஏ.எம்., என்ற, 'ஹைப்ரிட் ஆன்யூட்டி மாடல்' என்ற தொழில்நுட்பத்தில் இந்த மேம்பால சாலை கட்டப்படுகிறது.

இதற்காக, எல்.பி., சாலை, நீலாங்கரை, அக்கரை பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்படும். கே.என்.ஆர்., நிறுவனம் கட்டும் இந்த மேம்பால சாலைக்கான கட்டுமான பணியை, மூன்று ஆண்டுகளில் முடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, வேளச்சேரி தொகுதி காங்., - எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா, மண்டல குழு தலைவர் துரைராஜ், கவுன்சிலர்கள் ஆனந்தம், பாஸ்கரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலர் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

மக்களை ஏமாற்றும் செயல் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை, இ.சி.ஆரில், 2,100 கோடி ரூபாயில் மேம்பால சாலைக்கான ஒப்பந்தம், கடந்த டிச., 24ல், ஹைதராபாத்தைச் சேர்ந்த கே.என்.ஆர்., கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, திலிப் பில்ட்காப் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மேம்பால சாலை அமைப்பதற்கான பணி ஆணை வழங்கத் தடை விதித்தது. தடையை நீக்க அரசு முயன்றும் நீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே, இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவது என்பது, தமிழக மக்களை ஏமாற்றும் செயல். - அன்புமணி, பா.ம.க., தலைவர்.








      Dinamalar
      Follow us