sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

எர்ணாவூர் மேம்பாலத்தில் தெருவிளக்குகள் 'அவுட்'

/

எர்ணாவூர் மேம்பாலத்தில் தெருவிளக்குகள் 'அவுட்'

எர்ணாவூர் மேம்பாலத்தில் தெருவிளக்குகள் 'அவுட்'

எர்ணாவூர் மேம்பாலத்தில் தெருவிளக்குகள் 'அவுட்'


ADDED : செப் 01, 2025 01:11 AM

Google News

ADDED : செப் 01, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எண்ணுார்:எர்ணாவூர் மேம்பாலம் - பாரதியார் நகர் சந்திப்பு வரையிலான சாலையில், தெருவிளக்குகள் எரியாமல் கும்மிருட்டாக இருப்பதால், விபத்து அச்சம் நிலவுகிறது.

எண்ணுார் அடுத்த, எர்ணாவூர் மேம்பாலம் முதல் பாரதியார் நகர் சந்திப்பு வரையிலான, 300 மீட்டர் துார சாலையை, தினசரி ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை துறைமுகம் நோக்கி செல்லக் கூடிய, கன்டெய்னர், டிரைலர் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு பிரதான சாலையாகும்.

எர்ணாவூர் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் பாரத் நகர் சந்திப்பிலும், மணலி விரைவு சாலையில் இருந்து, எண்ணுார் விரைவு சாலைக்கு திரும்பும், பாரதியார் நகர் சந்திப்பிலும், கனரக வாகனங்கள் கட்டுப்பாடுன்றி தறிகெட்டு வருகின்றன.

அது போன்ற நேரங்களில் சாலையை கடக்க முற்படும், பாதசாரிகள், டூ - வீலர், ஆட்டோ உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இந்நிலையில், தெருவிளக்குகளும் எரியாமல் இருப்பதால், விபத்திற்கு சிவப்பு கம்பளம் விரிப்பது போல் உள்ளதாக, வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட, மாநகராட்சி மின் பிரிவு அதிகாரிகள் கவனித்து, தெருவிளக்குகளை சரி செய்து, ஒளிர செய்யவேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us