ADDED : பிப் 29, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதி, பெரும்பாக்கம் ஊராட்சியில், 12 வார்டுகள் உள்ளன. இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். 100க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.
புதிதாக வீடு கட்டி குடியேறுவோர், புதிய குடியிருப்புகள் என, இப்பகுதி நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் நிலையில், இங்குள்ள பெரும்பாலான தெருக்களில், பெயர்ப் பலகை பொருத்தப்படவில்லை.
இதனால், தபால் மற்றும் கூரியர் சேவை, உணவு டெலிவரி ஆட்கள், சரியான முகவரி தெரியாமல் தவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவும்.
- கே.ராஜாராம், 62, பெரும்பாக்கம்.

