ADDED : ஜூலை 14, 2026 06:44 AM

அ நிறம் | அளவு
ஆவடி: ஆவடி அடுத்த பருத்திப்பட்டு, வசந்தம் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 33. இவரது வீட்டின் பின்புறத்தில், இறக்கையில் அடிபட்டு பறவை ஒன்று விழுந்து கிடந்தது.
பறக்க முடியாமல் தவித்த அந்த பறவையை, ஆவடி தீயணைப்பு துறையினர் மீட்டனர். இறக்கையில் அடிபட்ட ராக்கொக்கு எனும் அந்த பறவைக்கு, ஆவடியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
பின், ஆவடி கோவிந்தன் தாங்கல் ஏரியில் பறவை விடப்பட்டது; சிறிது நேரத்திற்கு பின், பறந்து சென்றது.
