ADDED : ஜன 28, 2026 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மவுலிவாக்கம்: போரூர் அருகே முகலிவாக்கம், கிருஷ்ணா தெருவை சேர்ந்தவர் அக் ஷிதா, 20. இரண்டு ஆண்டுகளுக்கு முன், 12ம் வகுப்பு முடித்த இவரை, வெளிநாட்டில் மருத்துவம் படிக்க வைக்க, இவரது பெற்றோர் ஏற்பாடு செய்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு சென்ற அக் ஷிதா, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த மவுலிவாக்கம் போலீசார், அக் ஷிதா உடலை மீட்டு, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

