sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாணவியின்  கண்கள் தானம் 

/

மாணவியின்  கண்கள் தானம் 

மாணவியின்  கண்கள் தானம் 

மாணவியின்  கண்கள் தானம் 


ADDED : நவ 06, 2025 03:28 AM

Google News

ADDED : நவ 06, 2025 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவேற்காடு: தற்கொலை செய்து கொண்ட மகளின் கண்களை, பெற்றோர் தானமாக வழங்கினர்.

திருவேற்காடு, சுந்தரசோழபுரம், ராம் நகரைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ், 45; 'ஏசி' மெக்கானிக். இவரது மனைவி சுமதி, 40; தனியார் பள்ளி ஆசிரியை. தம்பதிக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

மகள் ஹரிணி, 17; தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லுாரி முடிந்ததும், ஜெய் கணேஷ் ஹரிணியை அழைத்து வந்து வீட்டில் இறக்கி விட்டு, கதவை பூட்டி சென்றுள்ளார்.

மாலை அவரது மனைவி பணி முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ஹரிணி படுக்கை அறையில், துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது.

அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது. திருவேற்காடு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு, பெற்றோர் சம்மதத்துடன் ஹரிணியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us