/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவர்களுக்கு சிற்றுண்டி தரும் திட்டம் துவக்கம்
/
மாணவர்களுக்கு சிற்றுண்டி தரும் திட்டம் துவக்கம்
ADDED : ஜன 20, 2026 05:31 AM

பெரம்பூர்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி நேற்று துவக்கியது.
பெரம்பூர் பல்லவன் சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 பயிலும் 604 மாணவியருக்கு, சைக்கிள்களை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.
மேலும், சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ - மாணவியருக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகளில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும் அவர் துவக்கி வைத்தார்.
நிகழ்வில், மேயர் பிரியா பேசியதாவது:
பொதுத் தேர்வுக்கு தயாராகிவரும் மாநகராட்சி பள்ளி மாணவ - மாணவியர் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு மாலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டம் இன்று துவக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், 12,558 பேர் பயன் பெறுவர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மாணவ - மாணவியர் நன்றாக படித்து உயர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

