/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றிய மாணவர்கள் கைது
/
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றிய மாணவர்கள் கைது
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றிய மாணவர்கள் கைது
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றிய மாணவர்கள் கைது
ADDED : பிப் 18, 2025 12:23 AM

பழவந்தாங்கல்,
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், வாலிபர்கள் இருவர் ரயில்களில் ஏறாமல் சுற்றி வந்தனர். அவர்களிடம் கத்தி இருந்துள்ளது. இதனால், பயணியர் போலீசாருக்கு புகார் அளித்தனர்.
அங்கு வந்த பழவந்தாங்கல் போலீசாரை கண்டதும், கத்தியுடன் இருந்த வாலிபர் தப்பி ஓடினார். நாற்காலியில் அமர்ந்திருந்த மற்றொரு நபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை சேர்ந்த பார்த்திபன், 19, என்பதும், சென்னை, பச்சையப்பன் கல்லுாரியில் இரண்டாமாண்டு படித்து வருவதும், கத்தியுடன் தப்பி ஓடியது, முதலாம் ஆண்டு மாணவர் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், மாம்பலம், பரங்கிமலை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பழவந்தாங்கல் ரயில் நிலையம் சென்றனர்.
அப்போது, அங்கு வந்த மின்சார ரயிலில், பயணியருக்கு இடையூறாக அடாவடி செய்த, அதே கல்லுாரியை சேர்ந்த மாணவர்கள் ஆறு பேரை பிடித்தனர்.
பின், பார்த்திபன் உள்ளிட்ட ஏழு பேரையும், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

