sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பஸ் கண்ணாடி உடைப்பு மாணவர்கள் அட்டகாசம்

/

பஸ் கண்ணாடி உடைப்பு மாணவர்கள் அட்டகாசம்

பஸ் கண்ணாடி உடைப்பு மாணவர்கள் அட்டகாசம்

பஸ் கண்ணாடி உடைப்பு மாணவர்கள் அட்டகாசம்


ADDED : டிச 07, 2024 12:25 AM

Google News

ADDED : டிச 07, 2024 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடியில் இருந்து கீழ் கொண்டையார் பகுதிக்கு, தடம் எண்: 120இ மற்றும் 61இ பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், கீழ் கொண்டையாரில் இருந்து ஆவடிக்கு, நேற்று காலை 8:00 மணிக்கு 61இ பேருந்து, 60க்கும் மேற்பட்ட பயணியருடன் வந்தது. பேருந்தில் ஓட்டுனர் உமாபதி, 50, நடத்துனர் ஜனார்த்தனன், 35, ஆகியோர் பணியில் இருந்தனர்.

பேருந்து, காலை 9:30 மணியளவில் ஆவடி பேருந்து நிலையம் வந்தபோது, மாணவர்கள் சிலர் பேருந்தின் பின் பக்க கண்ணாடியை கல் வீசி உடைத்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இது குறித்து, ஆவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

அதேபோல், கடந்த வாரம், தடம் எண்: 120இ வழித் தடத்தில், பள்ளி மாணவர்கள், பேருந்து படிக்கட்டில் நின்று, பாட்டு பாடி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். பயணியர் சிலர், அவர்களை பிடித்து ஆவடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us