sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அவசர சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றும் மாணவர்கள்

/

அவசர சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றும் மாணவர்கள்

அவசர சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றும் மாணவர்கள்

அவசர சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றும் மாணவர்கள்


ADDED : டிச 07, 2024 12:18 AM

Google News

ADDED : டிச 07, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை மாநிலக்கல்லுாரியில் படித்த திருத்தணியைச் சேர்ந்த மாணவர் சுந்தர், கடந்த அக்., 4ல், சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் சிலரால், வெட்டிக் கொல்லப்பட்டார்.

கொலை வழக்கில் கைதான சந்துரு, ஈஸ்வர், ஈஸ்வரன், யுவராஜ் ஆகிய நான்கு பேரும் ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த குற்றச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, நான்கு மாணவர்களுக்கும் சென்னை ராஜிவ்காந்தி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில், விபத்து அவசர சிகிச்சை பிரிவில், தலா இரண்டு பேர், 15 நாட்களுக்கு வேலை செய்ய வேண்டும் என. நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

அவசர சிகிச்சை பிரிவுகளில் நோயாளிகளின் மேல் இருக்கும் ரத்தத்தை துடைப்பது, விபத்து ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில், ஆம்புலன்ஸ்களில் வருவோரை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிச் செல்வது போன்ற பணிகளை, மாணவர்கள் செய்து வருகின்றனர்.

'இந்த தண்டனையால், அவசர சிகிச்சை பிரிவுக்கு ரத்த வெள்ளத்தில் வருபவர்களை பார்க்கும் மாணவர்களுக்கு, மற்றவர்களை கத்தியால் வெட்டுவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணம் வராமல் இருக்கும். மற்றவர்களின் வலியும், கஷ்டங்களும் புரியும்' என, டாக்டர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us