sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சுந்தரமூர்த்தி நாயனார் வீதியுலா விமரிசை

/

சுந்தரமூர்த்தி நாயனார் வீதியுலா விமரிசை

சுந்தரமூர்த்தி நாயனார் வீதியுலா விமரிசை

சுந்தரமூர்த்தி நாயனார் வீதியுலா விமரிசை


ADDED : ஆக 03, 2025 12:24 AM

Google News

ADDED : ஆக 03, 2025 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்,சுந்தரமூர்த்தி நாயனார் திருநட்சத்திரத்தையொட்டி, விசேஷ அபிஷேகம் மற்றும் நான்கு மாடவீதி உலா விமரிசையாக நடந்தது.

திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட மூவர், பாடல் பெற்ற ஸ்தலமாகும். இக்கோவிலின் மைய மண்டபத்தில், 63 நாயன்மார்களுக்கு சிலைகள் உள்ளன.

நாயன்மார்கள் பிறந்த திருநட்சத்திரத்தின்போது, விசேஷ அபிஷேகம், பூஜைகள் நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம், சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்த, ஆடி - சுவாதி திருநட்சத்திரம் சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடந்தது.

முன்னதாக, காலையில் கோவில் வளாகத்தில், 63 நாயன்மார்களில் முதலாவதாக வீற்றிருக்கும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல மங்கல பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

இரவு, உற்சவர் சுந்தரமூர்த்தி நாயனார் - சங்கிலி நாச்சியார், சிறப்பு மலர் அலங்காரத்தில், வெள்ளை யானை வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாடவீதி உலா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us