/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடத்தையில் சந்தேகம்: மனைவியை சரமாரியாக குத்தி கொன்ற கணவன்
/
நடத்தையில் சந்தேகம்: மனைவியை சரமாரியாக குத்தி கொன்ற கணவன்
நடத்தையில் சந்தேகம்: மனைவியை சரமாரியாக குத்தி கொன்ற கணவன்
நடத்தையில் சந்தேகம்: மனைவியை சரமாரியாக குத்தி கொன்ற கணவன்
ADDED : ஆக 16, 2025 03:27 AM
சென்னை,நடத்தையில் சந்தேகப்பட்டு, மனைவியை மதுபோதையில் கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
நேபாளம் மாநிலத்தை சேர்ந்தவர் சானியா யாதவ், 35. கருத்துவேறுபாடு காரணமாக, கணவர் சுனில் குமாரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரிந்தார்.
பின், மகள் டோலி, 10, மகன் தேவ், 7 ஆகியோருடன் தனியே வசித்து வந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சன்பக பஹதுார் சர்க்கி, 36 என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
குடும்பத்துடன், சென்னை கோட்டூர்புரம் எல்லையம்மன் கோவில் தெருவில், உமா சங்கர், 38 என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர்.
தினசரி சானியா யாதவ், கணவரை வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, 10:45 மணியளவில் தம்பதிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவர், மதுபோதையில் காய்கறி வெட்டும் கத்தியால், மனைவியின் வயிற்றிலும், கையியும் சரமாரியாக குத்தியுள்ளார்.
சானியா யாதவ்வின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் ஓடிவந்து பார்த்துள்ளார். அப்போது, கணவர் கத்தியால் குத்தியதில், மனைவியை துடிதுடித்து இறந்ததை பார்த்துள்ளனர்.
கோட்டூர்புரம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும், கொலை வழக்கு பதிந்து, கணவர் சன்பக பஹதுார் சர்க்கியை கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர்.
**