sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சைபர் கிரைம் அதிகாரி போல பேசி ரூ.7 லட்சம் அபேஸ்

/

சைபர் கிரைம் அதிகாரி போல பேசி ரூ.7 லட்சம் அபேஸ்

சைபர் கிரைம் அதிகாரி போல பேசி ரூ.7 லட்சம் அபேஸ்

சைபர் கிரைம் அதிகாரி போல பேசி ரூ.7 லட்சம் அபேஸ்


ADDED : நவ 22, 2024 12:10 AM

Google News

ADDED : நவ 22, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர், மறைமலை நகரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் மகள் அதிதி சரண்யா, 21.தனியார் கல்லுாரியில் பயின்று வருகிறார்.

கடந்த 19ம் தேதி, அதிதி சரண்யாவை மொபைல் போன் வாயிலாக தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், சைபர் கிரைம் அதிகாரி பேசுவதாக கூறி, உங்கள் வங்கி கணக்கு வாயிலாக, நீங்கள் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்வதாக கூறியுள்ளார். மேலும், தங்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை மற்றொரு வங்கி கணக்கிற்கு மாற்ற வேண்டும் என கூறி, யு.பி.ஐ., எண்ணை கேட்டுள்ளார்.

அதிதி சரண்யா, யு.பி.ஐ., எண்ணை கொடுத்த சிறிது நேரத்தில், அவரின் வங்கி கணக்கில் இருந்து, 7 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பெற்றோரிடம் அதிதி சரண்யா தெரிவித்ததையடுத்து, அவர் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர்கள், மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us