/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் கமிஷனர் அலுவலகம் இடத்தை காலி செய்ய நோட்டீஸ்
/
தாம்பரம் கமிஷனர் அலுவலகம் இடத்தை காலி செய்ய நோட்டீஸ்
தாம்பரம் கமிஷனர் அலுவலகம் இடத்தை காலி செய்ய நோட்டீஸ்
தாம்பரம் கமிஷனர் அலுவலகம் இடத்தை காலி செய்ய நோட்டீஸ்
ADDED : பிப் 10, 2024 12:26 AM
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சரத்குமார், வெங்கடேஷ், சவுத்ரி ஆகியோர் தாக்கல் செய்த மனு:
சோழிங்கநல்லுாரில், எங்களுக்கு சொந்தமாக தரைத்தளம், நான்கு அடுக்குகள் அடங்கிய கட்டடம் உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்காக, வாடகைக்கு கட்டடத்தை தரும்படி, அப்போதைய கமிஷனர் எங்களை அணுகினார்.
சொந்த கட்டடம் கட்டப்படும் வரை, தற்காலிகமாக இடத்தை குத்தகைக்கு வழங்கும்படி கேட்டார். 10.14 லட்சம் ரூபாய் மாத வாடகைக்கு தர ஒப்புக்கொண்டோம்.
போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்காக, கட்டடத்துக்குள் வசதிகளை மேற்கொள்ள, 1.10 கோடி ரூபாய் செலவு செய்தோம். 2021 டிசம்பரில் கட்டடம் ஒப்படைக்கப்பட்டது.
உத்தரவாதத்தை மீறி, வாடகை செலுத்த தவறினர். 2022 செப்டம்பர் வரை, மாத வாடகை மற்றும் வரி செலுத்தப்படவில்லை. பின், மாத வாடகையாக 6.08 லட்சம் ரூபாய் நிர்ணயித்து, எங்களுக்கு கடிதம் வந்தது. அந்த வாடகையை ஏற்காமல், இடத்தை காலி செய்து, ஒப்படைக்கும்படி கேட்டோம்.
கடந்த 2022 ஜனவரி முதல் நவம்பர் வரைக்கும், கட்டடத்தை பயன்படுத்திய வகைக்கு 82.16 லட்சம் ரூபாய்க்கு காசோலைகள் வழங்கப்பட்டன. குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்த நிலையில், கட்டடத்தை காலி செய்யாமல், கடந்த டிசம்பர் வரைக்குமான வாடகையாக 97.10 லட்சம் ரூபாய்க்கு காசோலைகள் வழங்கப்பட்டன. எங்களுக்கு மாதம், 4 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அலுவலகத்தை காலி செய்து, இடத்தை ஒப்படைக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசுக்கும், தாம்பரம் போலீஸ் கமிஷனருக்கும் உத்தரவிட்டு, விசாரணையை, மார்ச் 8ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.