/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிகிச்சை பலனின்றி டெய்லர் உயிரிழப்பு
/
சிகிச்சை பலனின்றி டெய்லர் உயிரிழப்பு
ADDED : நவ 05, 2024 12:46 AM
கானத்துார், கானத்துார், ரெட்டிக்குப்பத்தை சேர்ந்தவர் பழனி, 55; டெய்லர். இவரும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான ஷாகுல்ஹமீதும் நண்பர்கள்.
கடந்த 1ம் தேதி, இரண்டு பேருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதை பார்த்த ஷாகுல்ஹமீதுவின் மகன் ஐ.டி., ஊழியரான சையதுல்லா, 24, அவரது நண்பர் அகில், 24, ஆகியோர் சேர்ந்து, பழனியை தாக்கினர்.
இதில், கீழே விழுந்து, பலத்த காயமடைந்த பழனி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கானத்துார் போலீசார் வழக்கு பதிந்து, சையதுல்லா, அகில் ஆகியோரை, கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பழனி நேற்று மரணமடைந்தார். இதையடுத்து, இருவர் மீதும் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.